opponent events

தேவர் ஜெயந்தியை தடை செய்ய வேண்டும் – நாம் தமிழர் கட்சி அரசுக்கு கோரிக்கை

பல கோடி மக்களால் தெய்வமாக வணங்கக்கூடிய பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜையானது ஆண்டுதோறும் அக்டோபர் 29 , 30 ம் தேதிகளில் நடைபெறும். இந்த குருபூஜையன்று லட்சக்கணக்கான மக்கள் கூடி வணங்குவது மரபு. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த குருபூஜையை சீர்குலைக்கும் விதமாக பல அரசு சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அரசு சாராத தேச விரோத இயக்கங்களால் திட்டமிடப்பட்டு இயன்றவரை செய்து முடித்துவிட்டனர்.
இந்நிலையில் தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன் வந்து தேவர் கோவிலில் கற்பூர தீபத்தில் கைவைத்து கண்ணில் வைத்துக்கொண்டு நெற்றி நிறைய திருநீற்றை பூசிக்கொண்ட சீமான் தற்போது தன் கட்சியின் நிலைப்பாட்டையும் கோரிக்கையையும் வெளியிட வைத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் மற்றும் மள்ளர் கழகம் பொதுசெயலாளர் சோலை பழனிவேல்ராஜன் ஆகியோர் ” தேவர் ஜெயந்தியை தமிழக அரசு தடை செய்யவேண்டும் ” என்று கோரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

பெட்ரோல் குண்டுவீச்சு – இன்று 3 பேர் இறப்பு

பசும்பொன் சென்று திரும்பும்போது மதுரை சிந்தாமணி பகுதியில் பெட்ரோல் குண்டுகளை எறிந்தனர். அந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த 19 பேரும் உடல்முழுதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் இருக்கும் நிலையை பார்க்க
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த ஜெயபாண்டி என்பவர் நேற்று இரவு 11 மணியளவில் இறந்துள்ளார். இன்று காலை கென்னெட் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த வெற்

மீண்டும் ஒரு தேவர் ஜெயந்தி அறிவிப்பு : தடையை மீறி 24 ம் தேதி நடக்கிறது.

பசும்பொன் சென்று திரும்புகையில் தேவரினத்தவர்கள் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தேவரின அமைப்புகள் ஓரணியில் இணைந்து நிற்கின்றன.இந்நிலையில் தேவரினத்தவர்களால் தடைசெய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள பொன்னையாபுரம் வழியாக பரமக்குடியில் இருந்து பசும்போன் வரை மீண்டும் ஒரு தேவர் ஜெயந்தி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
றிவேல் மற்றும் சுந்தரபாண்டி இன்று காலை இறந்துள்ளனர்.பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

திருச்சுழி அருகே போலீஸ் அட்டூழியம் – பெண்களுக்கு அடி, 7 பேர் கைது

பசும்பொன் குருபூஜை அன்று பரமக்குடியில் தேவரின மூவர் கொடூரமாக அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தது. மூவர் கொலையின் காரணமாக திருச்சுழி அருகே  உள்ள செம்மநெடுஞ்சேரியில் மறியலில் ஈடுபட்டனர். மறியலின்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று திடீரென்று கூட்டங் கூட்டமாக செம்மநெடுஞ்சேரியில் புகுந்த போலிசாரால் தேவரினத்தவர்கள் வீடுகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. ஊரோடு அடித்து விரட்டப்பட்டுள்ளனர். பெண்களெல்லாம் கைக்ழந்தைகளை தூக்கிக்கொண்டு ஓடியதையும், போலீசார் விரட்டியதையும் பார்க்க சகிக்கவில்லை என்கிறார் நமது செய்தியாளர். இந்த சம்பவத்தில் 7 பேரை அடித்து உதைத்து கைதுசெய்து திருச்சுழி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றிருகின்றார்கள். இன்னும் அங்கிருந்து போலீசார்கள் விலக்கிக்கொல்லாமல் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர் இந்த தாக்குதலில் காயமடைந்த ஒருவர் கூறுகையில் ” தேவரினத்தவர்கள் மீது இப்படி போலீசார் தாக்குதல் நடத்தவேண்டிய அவசியம் என்ன? என் சாதிக்காரர்களை அவர்கள் அடித்தே கொன்றிருக்குறானுங்க… அதை எதிர்த்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டு எங்கள் எதிர்ப்பை காட்டுவது குற்றமா? எங்கள் உயிர் இந்த அரசுக்கு அவ்வளவு கேவலமா போச்சா? எங்களை ஊரைவிட்டே அடித்து வெளியேற்ற பொலிசாருக்கு உத்தரவிட்டது யார் ? என்று கோபத்தோடு கூறியுள்ளார்.




தேவரின படுகொலை: நாளை குமரியில் பார்வர்டு பிளாக் கண்டனக்கூட்டம்

தேவர் குருபூஜை செல்லும்போது வழிதவறி சென்ற ஒரே காரணத்திற்காக தேவர் இனைத்தைச் சேர்ந்த மூன்றுபேர் கொல்லப்பட்டனர். இத சம்பவத்தன்று மதுரை சிந்தாமணி பகுதியில் பெட்ரோல் குண்டுகளை எரிந்து தேவரினத்தவர் வந்த வாகனத்தினையும் தாக்கினர். இத தாக்குதலில் 19பேர் உடல் கருகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து தமிழகமெங்கும் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆங்காங்கே கலவரங்களும் , கண்டன ஆர்பாட்டங்களும் நடந்து வருகின்றது. இந்நிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் குமரி மாவட்டம்  சார்பாக திரு ஆர். பெரியசாமி அவர்களின் தலைமையில் நாளை 4/10/2012 ஞாயிறு காலை பத்து மணிக்கு  வடக்கு தாமரைக்குளத்தில் கண்டனக்கூட்டம் நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக